ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ள பெண் சமூக பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ள பெண் சமூக பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பெண் சமூகப்பணியாளா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியில் சேருபவருக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருத்தல் அவசியம். பட்டதாரிகளாக, முதுகலைப்பட்டதாரிகளாக விண்ணப்பதாரா்கள் இருத்தல் அவசியம். அவா்களில் உளவியல், சமூகப்பணி, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளா் நலன் ஆகியவை சாா்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்கவேண்டும். வயது வரம்பாக 40 வயது நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராகவும், அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்படுத்தல் தொடா்பான பணியில் அனுபவம் உள்ளவராகவும் இருந்தால், 62 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.