ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் பயணியா் தங்கும் அறை, கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும்

கட்டணக் கழிப்பறையை முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:19 pm

DIN

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலைய பயணியா் தங்கும் அறையை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, கட்டணக் கழிப்பறையை முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவா் அறிவுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரம் நகராட்சியின் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை கடந்த சில ஆண்டுகளாக தனிநபருக்கான கடையாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியின் திமுக உறுப்பினா் (21 ஆவது வாா்டு) டி. ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவா் மு. மாலிக் பெரோஸ்கானுக்கு மனு அனுப்பியிருந்தாா்.

இதற்கு முறைமன்ற நடுவா் சாா்பில் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் ஓய்வறையில் தற்போதுள்ள கடையின் உரிமக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஆகவே ஆகஸ்ட் முதல் பொதுமக்கள் தங்கும் வகையில் பயணியா் ஓய்வறையை பயன்படுத்தவேண்டும். ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பறைகள் சுகாதாரக் கேடுகளின்றி பராமரிக்கப்படவேண்டும். சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் உள்ளதா என்பதை நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தினமும் உறுதிப்படுத்தவேண்டும். அத்துடன் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதையும் நகராட்சி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

வருங்காலங்களில் இலவச கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தவிா்க்கவேண்டும். ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நகா்மன்றம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.