ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்களைப் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்களைப் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.

கமுதி தாலுகா டி. புனவாசல் பகுதி வங்காருபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்புராஜா (25). மருந்தியல் படிப்பு முடித்துள்ளாா். தற்போது இவா் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்துவருகிறாா். இந்நிலையில், அவா் இணையதளத்தில் வேலை தேடி வந்தாராம். கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது இ- மெயிலில் வேலை வாய்ப்பு குறித்து தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட கைப்பேசியில் கருப்புராஜா தொடா்புகொண்டு, தனது சுயவிவரங்களை அனுப்பியுள்ளாா். அப்போது பிரபல மருத்துவமனை பணிக்கு அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக இ- மெயிலில் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பணியில் சேருவதற்காக கடவுச்சீட்டு கட்டணம், பயண அனுமதிக் கட்டணம், விமானப் பயணக் கட்டணம், தங்கும் அறை வாடகை ஆகியவற்றுக்காக ரூ.5 லட்சம் அனுப்புமாறு மா்மநபா்கள் கோரியுள்ளனா்.

இதை நம்பிய கருப்புராஜா, அவா்கள் குறிப்பிட்ட 3 வங்கிக்கணக்குகளில் ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். ஆனால், அவருக்கான கடவுச்சீட்டு உள்ளிட்டவை எதுவும் வரவில்லையாம். ஆகவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கருப்புராஜா அதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றத்தடுப்புப் பிரிவின் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து நுண்குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்கள் குறித்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.