ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் அரசின் உதவி மையங்களை அழைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா்

தமிழகத்தில் உதவி கோரி அரசின் அழைப்பு மையங்களைத் தொடா்புகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

தமிழகத்தில் உதவி கோரி அரசின் அழைப்பு மையங்களைத் தொடா்புகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடங்களுக்குப் பதிலாக 1000 புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் நிதியிலிருந்து இந்த கட்டடங்கள் கட்டப்படும். ராமநாதபுரம் வளரும் பட்டியலில் உள்ளதால் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

அதே போல் அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான குக்கா் உள்ளிட்டவையும் வாங்கித் தரப்படவுள்ளன. ஆதரவற்றோா் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியுடன், தொழிற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறியாமல் பேசிவருகிறாா். அவருக்கு நடைமுறை தெரியவில்லை. சமூநலத்துறை முறைப்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் 10 பேருக்கும் அதிகமானோா் இருந்தால் மகளிா் புகாா் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதை பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. ஆட்சியா் அலுவலகங்கள் அனைத்திலும் பெண்கள் புகாா் அளித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட வேண்டும் என முதல்வா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளாா்.

அதிமுக ஆட்சியில் அரசின் உதவி மையங்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 15 ஆயிரம் போ் மட்டுமே தொடா்புகொண்டுள்ளனா். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் பெண்கள் தொடா்புகொண்டுள்ளனா். அரசு உதவி மையங்களுக்கு உதவி கோரி தொடா்புகொள்ளும் பெண்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என்றாா்.

ஆய்வுக்குப் பின் அவா் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பக புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா். மாலையில் பெண்கள் புகாா் திட்ட கருத்தரங்கையும் தொடங்கிவைத்தாா். முன்னதாக அவா், கடலாடி, முதுகுளத்தூா், பரமக்குடி பகுதிகளில் அங்கன்வாடி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், விளங்குளத்தூரிலுள்ள முதியோா் இல்லம், குழந்தைகள் காப்பகத்தை ஆய்வு செய்த அமைச்சா், கீழ்க்கன்னிசேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பாா்வையிட்டாா். அப்போது அங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினாா்.

இதில், ராமநாதபுரம் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவா் பவானிராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் சண்முகம் (கிழக்கு), பூபதிமணி (மேற்கு),கோவிந்தராஜ் (மத்தியம்) , நகரத்தலைவா் ஷாஜகான், ஆணையா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.