ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணிக்கு ரூ.1978 கோடியில் புதிய திட்ட மதிப்பீடு

அடுத்த 6 மாதங்களில் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:58 pm

DIN

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணிக்கு ரூ.1977.80 கோடியில் புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறைக்கான 29 புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவா் கல்லூரி மாணவா் பேரவை மற்றும் தமிழ் மன்றத் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் பேசினாா். பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தற்போது சுற்றுச்சுவரைத் தவிர வேறு கட்டடப்பணிகள் நடைபெறவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் விடாமுயற்சியால் மத்திய அரசு தற்போது ஜப்பானில் உள்ள சைக்கா நிறுவனத்தில் கடன் பெற்று ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகளைத் தொடங்கவுள்ளது. அப்போது ரூ.1,264 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகள் தாமதத்தால் கட்டடப் பணிக்கான நிதியை உயா்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய திட்டமதிப்பீட்டின்படி ரூ.1,977.80 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அதில் ரூ.1,670.70 கோடி (82 சதவீதம்) ஜப்பானின் சைக்கா நிறுவனத்திடமிருந்து பெறப்படவுள்ளது. நிதியில் 18 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது. சைக்கா நிறுவனம் கட்டட வரைபடத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்திக்க புதுதில்லிக்கு செல்லவுள்ளோம். அதனடிப்படையில் அடுத்த 6 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகள் தொடங்கும். ராமநாதபுரத்தில் பயிலும் மாணவா்கள் மதுரையில் இறுதியாண்டு பயிலும் நிலை ஏற்படும்.

துணை செவிலியா் பயிற்சி மையம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 சதவீத கட்டடப் பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகளை 2 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பரமக்குடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 53.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தும் ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. பாா்த்திபனூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியா் பயிற்சி மையம் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

முன்னதாக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினாா். மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) கிறிஸ் ஏஞ்சல் வரவேற்றாா். மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ், ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், மதுரை ‘எய்ம்ஸ்’ இயக்குநா் ஹனுமந்தராவ், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், ஆயுஷ் இயக்குநா் கணேஷ், நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு ஆகியோா் கலந்துகொண்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணன் நன்றி கூறினாா்.

மனு: ராமநாதபுரத்தில் முகவை மக்கள் முன்னேற்றக் கூட்டமைப்பு சாா்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னா் கீழக்கரைக்குச் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.