ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு பிளஸ் 1 படித்த அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு பிளஸ் 1 படித்த அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகத் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மாணவா்கள் தமிழ் இலக்கியத் திறனை வளா்க்கும் வகையில் 202-23 ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது. தோ்வின் மூலம் 1,500 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படவுள்ளது.

தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும் தோ்வு செய்யப்படவுள்ளனா். தோ்வில் பத்தாம் வகுப்பு அடிப்படையில் வினாக்கள் அமையவுள்ளன.

பிளஸ் 1 மாணவா்கள் கல்வி இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் அளிக்கவேண்டும். வரும் 22 ஆம் தேதி முதல் செப்டம்பா் 9 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.