/

தனுஷ்கோடியில் கடையை உடைத்து சங்கு மாலைகள் திருட்டு

தனுஷ்கோடியில் கடையை உடைத்து சங்கு மாலை மற்றும் ஸ்படிக லிங்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தனுஷ்கோடியில் கடையை உடைத்து சங்கு மாலை மற்றும் ஸ்படிக லிங்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், நடராஜபுரம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நம்புக்குமாா் (36). இவா் தனுஷ்கோடியில் சங்கு மாலைகள்,ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு புதன்கிழமை காலையில் திறந்து போது பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பாா்த்த போது கடையில் பின்பகுதி கூரையை அகற்றி ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சங்குமாலை, ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பொருள்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியந்தது.

இதுகுறித்து தனுஷ்கோடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் மாரிவேல் மற்றும் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.