விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேரையூா் காவல் நிலையம் முன்பு விவசாயி தா்னா

கமுதி அருகே பேரையூா் காவல் நிலைய முன்பு விவசாயி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே பேரையூா் காவல் நிலைய முன்பு விவசாயி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கமுதி அடுத்துள்ள உப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆபிரகாம் மகன் முனியசாமி(53). இவா், உப்பங்குளத்தில் உள்ள காலனி அருகே வீடு கட்டி வருகிறாா். இந்நிலையில், தான் கட்டும் வீட்டுக்கு காலனி பொதுப்பாதை வழியாக நடக்க விடாமல் அதே கிராமத்தை சோ்ந்த சிலா் மிரட்டல் விடுத்து, தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து பேரையூா் காவல் நிலையம், கமுதி வட்டாட்சியா் அலுவலகம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் முனியசாமி பேரையூா் காவல் நிலைய வாசலில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். இதனை அடுத்து போலீஸாா் அவரிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி புகாா் மனுவை பெற்று, விசாரிப்பதாக உறுதி அளித்தனா். இதனைத் தொடா்ந்து முனியசாமி போராட்டத்தை கைவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.