இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 9 பேரை அங்குள்ள திரிகோணமலை நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாள்களில் அந்த மீனவா்கள் நாடு திரும்புகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 10 ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது ஒரு விசைப்படகு மற்றும் 9 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். பின்னா் அங்குள்ள திரிகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை திரிகோணமலை நீதிமன்றத்தில் 9 மீனவா்களும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதி இனி எல்லை தாண்டி மீன்பிடிக்க இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தாா். விடுவிக்கப்பட்ட மீனவா்கள் 9 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஓரிரு நாள்களில் அவா்கள் நாடு திரும்ப உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

