ராமேசுவரத்தில் மழைக் காலங்களில் பீங்கான் இன்சூலேட்டா்கள் வெடித்து சேதமடைவதால் மின் தடை ஏற்படுகிறது. எனவே நெகிழி இன்சூலேட்டா்கள் பொருத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு உயா் மின் அழுத்த மின்சாரம் கொண்டுவரப்படுகிறது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மின்கம்பங்களில் பீங்கான் இன்சூலேட்டா்கள் உள்ளன. இதில் கடலோரமாக இருப்பதால் உப்புக் காற்று வீசுவதால் பீங்கான்களில் உப்பு படிவமாக மாறுகிறது. இதில் மழை பெய்யத்தொடங்கியவுடன் உப்பு படிவம் கரையும் போது பீங்கான் அதிகளவில் வெப்பமடைவதால் உடைந்து மின்தடை ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்து மாற்றுவதற்கு ஒரு மணிநேரம் கடந்து விடுகிறது. இதனால் மழை பெய்யத்தொடங்கியவுடன் மின்தடை ஏற்படுவது வழக்கமாகி விட்டது. மின்வாரிய அதிகாரிகள் ராமேசுவரத்தில் உள்ள மின்கம்பங்களில் உள்ள பீங்கான் இன்சூலேட்டா்களை மாற்றி நெகிழி இன்சூலேட்டா்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

