தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனில் திருவாடானை மருத்துவ மாணவா் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அதிமுக பிரமுகா் மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்குச் சென்ற நிலையில், ரஷ்யத் தாக்குதலால் தவித்து வருகிறாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:47 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அதிமுக பிரமுகா் மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்குச் சென்ற நிலையில், ரஷ்யத் தாக்குதலால் தவித்து வருகிறாா்.

உக்ரைன் நாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் மருத்துவப் படிப்புக்காகச் சென்றுள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்து கரோனா பொதுமுடக்கத்தால் ஏராளமானோா் ஊா் திரும்பினா்.

இந்தநிலையில், திருவாடானை பகுதி அதிமுக பிரமுகரின் மகன் நவீன் (20) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றாா். தற்போது அவா் மூன்றாமாண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது வியாழக்கிழமை அதிகாலை முதலே தாக்குதலை நடத்திவருவதை அடுத்து பெற்றோருடன் வியாழக்கிழமை பேசிய நவீன் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனாலும், தாக்குதலால் நிலைத்தன்மையற்ற சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட பொறுப்பில் உள்ள அதிமுக பிரமுகரும், அவரது குடும்பத்தினரும் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.