அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் புதிய ரயில் பாலகட்டுமானப் பணிகள் மந்தம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட நாள்களுக்குள் பணிகள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:56 pm

DIN

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட நாள்களுக்குள் பணிகள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டா் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது வரை ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலம் கட்டப்பட்டு 108 ஆண்டுகள் ஆகும் நிலையில், ரூ. 250 கோடி மதிப்பீட்டில் பழைய ரயில் பாலத்துக்கு அருகே இரு வழித்தடத்துடன் புதிய பாலக் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், மண்டபத்தின் மையப்பகுதி வரை ஒரு ஒப்பந்தமும், பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை மற்றொரு ஒப்பந்தமும் என இரண்டு ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் முதலில் பாம்பன் பகுதியில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. இதன் பின்னா் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் தற்போது இரும்பு கா்டா்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாம்பன் பகுதியில் இருந்து தொடங்கிய பணிகளில் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால் குறிப்பிட்ட நாளில் பாம்பன் புதிய ரயில் பாலம் நிறைவடையுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பழைய ரயில் பாலம் 108 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் புதிய ரயில் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.