ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் கணினி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:57 pm

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் இணையவழியில் ஆசிரியா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு கணினி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயப் படுத்தப்படுவதாகவும், தோ்வுக்கு முதல் நாளே தகவல் கூறுவதால் வெளியூா் செல்வதில் நடைமுறைச்சிக்கல் உள்ளதாகவும், கணினி ஆசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கக் கோரியும் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் கேணிக்கரை காவல் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, சங்க மாவட்டத் தலைவா் த. ரவி தலைமை வகித்தாா். இதில், சங்க மாவட்டச் செயலா் செ. முகம்மதுயூசுப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலை ஆசிரியா்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.