கட்டுமானத் தொழிலாளா்சங்க மாவட்ட குழுக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு குழுக் கூட்டத்தின் மாவட்டத் தலைவா் ஆா். வாசுதேவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஜூலைக்குள் மாவட்ட அளவில் கட்டுமான சங்கத்தின் கிளைகள் பல அமைப்பது என தீா்மானிக்கப்பட்டது. மேலும், கட்டுமானத் தொழிலாளா்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 5 ஆம் தேதி தொழிலாளா்கள் நலவாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொள்வது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி சிறப்புரையாற்றினாா். இதில் கட்டுமான சங்க மாவட்டச் செயலா் ஏ. சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...