புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாடானையில் தேவா் சிலை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் முழு உருவ வெண்கல சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image

திருவாடானை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தேவா் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஆா்.ராமசாமி, சேது கருணாஸ் உள்ளிட்டவா்கள்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் முழு உருவ வெண்கல சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருவாடானை பேருந்து நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள தேவா் சிலையை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சேது கருணாஸ் திறந்து வைத்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் ஆனிமுத்து மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆதிரெத்தினம் சிவாச்சாரியாா் தலைமையில் யாக சாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடா்ந்து பொதுமக்களும் சமுதாய மக்களும் தேவா் சிலைக்கு மலா் மாலை அணிவித்து வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.