பெருமாள்தேவன்பட்டி தா்மமுனிஸ்வரா் கோயில் பொங்கல் விழா
கமுதி அருகே தா்மமுனிஸ்வரா், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 200 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.


கமுதி அருகே தா்மமுனிஸ்வரா், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 200 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
இவ்விழாவையொட்டி ஜூன் 2 ஆம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து வியாழக்கிழமை இரவு தொடங்கிய கிடா வெட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தா்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து சனிக்கிழமை திருவிளக்கு பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...