இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் கடந்த பிப். 28 முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும், கமேனி கொல்லப்பட்டதற்கு பல கட்சிகள் இந்தியா முழுவதும் இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் குழந்தைகள் உள்பட பலரும் ஈரானுக்கு நன்கொடை வழங்கும் காணொளிகளைப் பகிர்ந்த ஈரான் தூதரகம், ”மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் ஈரான் மக்களுக்கு துணை நிற்கும் காஷ்மீர் மக்களுக்கு எங்களின் இதயம் நிறைந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ”உங்களின் கருணையை ஒருபோதும் மறக்கமாட்டோம். நன்றி இந்தியா!” என ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு தங்களது உண்டியல் சேமிப்புகளை காஷ்மீர் குழந்தைகள் அனுப்பும் காணொளியையும் பகிர்ந்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்திய அரசு ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களை ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. ஆனால், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இதில் இந்திய எதிர்க் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
'Kindness will never be forgotten': Iranian embassy thanks India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

ஹோர்முஸ் நீரிணை: எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் 2 கப்பல்கள்!
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


