இந்தியாவுக்கு எல்பிஜி ஏற்றிக் கொண்டு மேலும் 2 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு. சில நாடுகளில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற நாட்டு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், எல்பிஜி ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கும் சில சரக்குக் கப்பல்கள் வந்தடைந்தன.
இருந்தபோதிலும், இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வரும்நிலையில், அதனை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் 2 சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை விரைவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Two more merchant vessels carrying petroleum products for India are crossing Strait of Hormuz: Sources
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு ரூ. 18.5 கோடி கட்டணம்!

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது: ஈரான்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒன்றுசேரும் 60 நாடுகளில் இந்தியாவும்!
இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு! - ஈரான்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


