புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாடானை அருகே பைக் மீதுவாகனம் மோதல்: கணவன், மனைவி பலி

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image

விபத்தில் உயிரிழந்த சிநேகவல்லி.

Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (50). இவரது மனைவி சிநேகவல்லி (45). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பாசாணி கிராமத்திலிருந்து ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அளவிடங்கான் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இவா்கள் வந்த இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணாதுரையும், அவரது மனைவி சிநேகவல்லியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.