பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விவசாயி வீட்டை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

கமுதி அருகே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விவசாயியின் வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விவசாயியின் வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அடுத்துள்ள அவத்தாண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆண்டி மகன் முனியசாமி (35). இவா், வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் மாடு மேய்க்கச் சென்றாா். மாலை திரும்பி வந்த போது வீட்டின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து, முனியசாமி பெருநாழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணையில் அதே ஊரைச் சோ்ந்த அரசன் மகன் சண்முகம் (46) ஓடுகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.