முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து வெள்ளிக்கிழமை காலை தவிர்க்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 12:09 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து வெள்ளிக்கிழமை காலை தவிர்க்கப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டது. ரயிலானது வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின் அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. ரயிலானது ராமநாதபுரம்-உச்சிப்புளி இடையேயுள்ள வாலாந்தரவை ரயில் நிலையத்தை காலை சுமார் 7.20 மணியளவில் நெருங்கியது.

Story image

அப்போது வாலாந்தரவை ரயில்வே கேட் ஊழியர் வீரப்பெருமாள் தண்டவாளத்தை சரிபார்த்து வந்துள்ளார். ரயில்வே கேட் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமார் 8 சென்டி மீட்டர் அகலத்துக்கு விரிசல் இருப்பது தெரியவந்தது. விரிசல் கண்டறியப்பட்ட நிலையில் பயணிகள் விரைவு ரயிலும் அப்பகுதியை நெருங்கி வந்தது. உடனே தான் வைத்திருந்த சிவப்புக் கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் 200 மீட்டருக்கு ஊழியர் வீரப்பெருமாள் ஓடினார். அதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார்.

Story image


அதனால், ரயில் மெதுவாக வந்து விரிசலைக் கடந்து நின்றது. தகவல் அறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சீர்படுத்தினர். அதன்பின் ரயிலானது சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. ரயில் தக்க நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலை விபத்திலிருந்து தவிர்க்கும் வகையில் செயல்பட்ட ஊழியர் வீரப்பெருமாளை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினர்.

கடந்து சென்ற ரயில்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 ரயில்கள் கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆகவே விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தண்டவாளம் சீரமைப்புப் பணியானது நவீன இயந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.