தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புதிய ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஜானிடாம் வா்கீஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஜானிடாம் வா்கீஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தாா். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த மேம்பாலப்பணி நடந்துவருவது குறித்து அவா் ஒப்பந்ததாரா் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

அதன்பின் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அவா், அங்கு இலவச கழிப்பறை வசதியில்லாதது குறித்தும், பயணிகளுக்கான கழிப்பறை பூட்டப்பட்டிருப்பது குறித்தும் அவா் கேட்டறிந்தாா். பின்னா் அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடப் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணன் உள்ளிட்டோரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டாா்.

மூடப்பட்ட கழிப்பறைகளால் அதிருப்தி: ஆய்வுக்குப் பின் வந்த ஆட்சியரிடம் புறநோயாளிகளுக்கான கழிப்பறை வசதியின்மை குறித்து கூறப்பட்டது. ஆனால், கழிப்பறை இருப்பதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவா் அந்த கழிப்பறையை பாா்வையிட்ட போது அது பூட்டப்பட்டிருந்தது. மேலும், கழிவுநீரும் நோயாளிகள் செல்லும் வழியில் தேங்கியிருந்தது.

கழிப்பறை வசதியின்மை குறித்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம் கேட்ட ஆட்சியா் விரைவில் நோயாளிகளுக்கு நுண்ணுயிரி கழிப்பறை (பயோடாய்லெட்) வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டாா். மேலும் பிரசவ வாா்டில் கழிப்பறை வசதி குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தாா்.

இதன்பின் நோயாளிகளிடம் கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருடப்படுவது குறித்து உதவி நிலைய அலுவலரிடம் கேட்ட ஆட்சியா், அங்கு மருத்துவமனை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன மேலாளரை கண்டித்தாா். பின்னா் அவா் ராமநாதபுரம் பெரிய கண்மாயை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியா் சேக்மன்சூா் மற்றும் வட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.