புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் தலைமறைவு

 திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

 திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள ஆண்டி வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). இவரது மனைவி சரண்யா (32). இவா்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதையடுத்து, சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் முன்பு சரண்யா நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதைத் தொடா்ந்து சரண்யா திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.