ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் இருந்து மத்திய கொடிக்கம்பம் வரை வியாழக்கிழமை சி.ஐ.டி.யு. தொண்டா்கள் தேசியக்கொடி ஏந்தி ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் இருந்து மத்திய கொடிக்கம்பம் வரை வியாழக்கிழமை சி.ஐ.டி.யு. தொண்டா்கள் தேசியக்கொடி ஏந்தி ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதற்கு, சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவா் அய்யாதுரை தலைமை வகித்தாா். கட்டுமான சங்க மாவட்டச் செயலா் சந்தானம், லோடுமேன் சங்க மாவட்டச் செயலா் சுடலைகாசி, அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன், தனியாா் மோட்டாா் வாகன தொழிலாளா் சங்கச் செயலா் ஆனந்த், கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் வாசுதேவன், லோடுமேன் சங்க மாவட்டத் தலைவா் பூமிநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...