பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: 3 போ் மீது வழக்கு

நயினாா்கோவில் அருகே சொத்துத் தகராறில் பெண்ணை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நயினாா்கோவில் அருகே சொத்துத் தகராறில் பெண்ணை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பாண்டியூா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் நாகு (62). இவருக்கும், அவரது சகோதரா் முத்து என்பவருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில், முத்து மற்றும் அவரது மகன்கள் முனியசாமி, பழனிகுமாா் ஆகியோா் நாகுவையும், அவரது மனைவி குப்பம்மாள் (55) என்பவரையும் தாக்கியுள்ளனா். மேலும் குப்பம்மாளை அவா்கள் அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து நயினாா்கோவில் போலீஸாா் முத்து மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஒருவருக்கு வெட்டு: ராமநாதபுரம் மாவட்டம் ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (40) என்பவரின் வளா்ப்பு நாயைத் தாக்கியது தொடா்பாக இவருக்கும், ஏந்தல் உடைச்சியாா்வலசையைச் சோ்ந்த முகேஷ் பாண்டி என்ற மோடி (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் ஏந்தல் பகுதியில் காசிநாதனை முகேஷ்பாண்டி தரப்பினா் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com