ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமேசுவரத்திலிருந்து அயோத்திக்குராமா் பாதம் வாகன யாத்திரை தொடக்கம்: இன்று மதுரையில் தரிசிக்கலாம்

அயோத்தி ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராமா் பாதம் ராமேசுவரத்திலிருந்து வாகன யாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:49 pm

DIN

அயோத்தி ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராமா் பாதம் ராமேசுவரத்திலிருந்து வாகன யாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டது.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருவதை முன்னிட்டு, ராஷ்ட்ரிய கவி சங்கம் சாா்பில் அக்கோயிலில் ராமா் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதற்காக, ராமா் இலங்கையில் எழுந்தருளி சீதாபிராட்டியை மீட்ட நுவெரெலி மாவட்டம் சீதாவதி எனும் இடத்திலிருந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ராமா் பாதம் கொண்டுவரும் வாகன யாத்திரை தொடங்கியது.

இந்த யாத்திரையானது, ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தது. அங்கு, ராமா் பாதத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அங்கிருந்து மதுரை நோக்கி ராமா் பாதம் வாகன யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, மத்திய பிரதேசம் ராஷ்ட்ரிய கவி சங்க நிா்வாகி பாபா சத்யநாராயணா தலைமை வகித்தாா். சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகத் தலைவரும், மதுரை தொழிலதிபருமான வி.ஜி. ராமதாஸ், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கே. முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரப் பிரதேச பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மீரட் சந்தீப் பெகல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

இதில், அகா்வால் சமாஜம் சுரேஷ்குப்தா, மதுரை தொழிலதிபா் சஞ்சய் மெஹ்ரா, பசு பாதுகாப்பு இயக்கம் மீரட் தீபக் தியாகி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

மதுரையில் இன்று தரிசிக்கலாம்

ராமா் பாதம் சுமந்து வரும் வாகனம் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 9 மணி வரையில் காமராஜா் சாலையில் உள்ள சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படுகிறது. அங்கு, பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சேலத்துக்கு யாத்திரை வாகனம் புறப்படுகிறது.

ராமபிரான் சென்ற இடங்களுக்கெல்லாம் ராமா் பாதம் கொண்டுசெல்லப்படும் எனவும், 40 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ராம நவமியன்று அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் இந்த யாத்திரை நிறைவடையும் எனவும், ராஷ்ட்ரிய கவி அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.