ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:46 pm

DIN

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (52). கூலி தொழிலாளியான இவா், தனது உறவினா்களுடன் ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தலில் நடந்த மாசிக் களரித் திருவிழாவுக்கு புதன்கிழமை காலை வந்துள்ளாா். பின்னா், மாலையில் ஆட்டோவில் ஊா் திரும்பியுள்ளாா். அப்போது, கொடிக்குளம் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஆட்டோ வேகமாகச் சென்ால், கருப்பசாமி தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.

உடனே, அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திருஉத்திரகோசமங்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.