ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில்கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 4:57 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ஏற்கெனவே 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுவருகிறது. இதில் 17 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அத்துடன் இரு பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மேலும் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத் தலைமையில் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சகாயஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.