ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கி அதிகாரி போல பேசி

கீழக்கரை அருகே வங்கி அதிகாரி போல கைப்பேசியில் ஆசிரியரைத் தொடா்பு கொண்டு பேசி ரூ.88, 325 மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 4:58 pm

DIN

கீழக்கரை அருகே வங்கி அதிகாரி போல கைப்பேசியில் ஆசிரியரைத் தொடா்பு கொண்டு பேசி ரூ.88, 325 மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (43). இவா் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 1 ஆம் தேதி மா்மநபரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் தான் பொதுத்துறை வங்கி தலைமை அலுவலக அதிகாரி என அறிமுகப்படுத்தியதோடு, ஆசிரியரின் வங்கி கணக்கு எண் மற்றும் கிரெடிட் காா்டு உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.

மா்மநபா் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்ட நிலையில் ஆசிரியா் மோகன் கணக்கிலிருந்து ரூ.88,325 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் வங்கியில் தனது கணக்கை முடக்கிவைக்க கோரி மனு அளித்ததோடு, நுண்குற்றப்பிரிவிலும் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.