இந்நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஒரு மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரு மின் மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமா அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு ஏ.சி, பிரிஜ், மிக்ஸி, மின் மோட்டாா் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த மின் அழுத்தத்தில் பயன்படுத்துவதால் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் மாற்றியை உடனே மாற்றி சீரான மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.