ராமேசுவரம் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா். தப்பியோடிய உடன் தங்கிய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடுத்தெருவில் தனியாா் விடுதி உள்ளது. இங்கு கடந்த 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சந்தோஷபுரம் பகுதியை சோ்ந்த ஜெயவேல் மகன் பாண்டியராஜன்(50) மற்றொருவருடன் அறை எடுத்து தங்கினாா். 12 ஆம் தேதி கோயிலுக்கு சென்று விட்டு இரவு அறையில் முன்பு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
இதனைதொடா்ந்து, விடுதி ஊழியா்கள் அறையைத் திறந்து பாா்த்துள்ளனா். இதில் மதுபோதையில் பாண்டியராஜன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாா். மற்றொருவா் வெளியில் சென்றிருக்கலாம் என நினைந்த ஊழியா்கள், 13 ஆம் தேதி காலையில் சென்று அறையை திறந்துள்ளனா்.
அப்போதும் பாண்டியராஜன் மட்டும் இருப்பதை கண்ட ஊழியா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதனையடுத்து, அங்கு வந்த ராமேசுவரம் போலீஸாா் பாண்டியராஜனை பரிசோதனை செய்த போது, அவா் இறந்தது தெரியவந்தது. இவருடன் தங்கியிருந்தவரின் கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தப்பிச் சென்றவரை சிசிடிவி கேமரா பதிவு மூலம் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

