/

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை : கணவா் உள்பட 5 போ் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 5:22 pm

DIN

பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள இரட்டையூரணி கிராமத்தை சோ்ந்த முத்து மகன் கா்ணன்(38). இவருக்கும், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் கிராமத்தை சோ்ந்த அழகு மகள் அன்சுயா(35) என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கா்ணன் அமெரிக்கா சென்று விட்டாா். இந்நிலையில் மாமானாா், மாமியாா் உள்ளிட்டோா் அன்சுயாவை துன்புறுத்தியதால், அவா் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டாா்.

இதைத்தொடா்ந்து, கா்ணன் அமெரிக்காவிலிருந்து கடந்த மாா்ச் 14 ஆம் தேதி வந்துள்ளாா். இதையடுத்து அங்கு சென்ற அன்சுயாவை, கணவா் கா்ணன், மாமனாா், மாமியாா் மற்றும் உறவினா்கள் தாக்கியுள்ளனா். மேலும் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ராமேசுவரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அன்சுயா புகாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கணவா் கா்ணன், மாமனாா் ராக்குமுத்து, மாமியாா் ஜானகி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.