தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பட்டிணம்காத்தன் ஊராட்சியின் பதிவேடுகளை பாா்வையிட்ட மனுதாரா்

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டிணம்காத்தான் ஊராட்சிப் பதிவேடுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி மனுதாரா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :20 மே 2022, 5:11 pm

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டிணம்காத்தான் ஊராட்சிப் பதிவேடுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி மனுதாரா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் நகராட்சி அருகேயுள்ளது பட்டிணம்காத்தான் ஊராட்சி. இந்த ஊராட்சியில்தான் ஆட்சியா் அலுவலக வளாகம், கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனை, காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. ஊராட்சித் தலைவராக சித்ரா மருது உள்ளாா்.

இந்நிலையில், பட்டிணம்காத்தான் ஊராட்சியில் ராம் நகா் பகுதி அன்புகாா்டன் முதல் தெருவைச் சோ்ந்த விஜயபாஸ்கா் என்பவா் ஊராட்சியின் பதிவேடுகளை பாா்வையிட அனுமதி கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்தாா். அதனடிப்படையில் அவா் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை பகலில் பட்டிணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் வந்து, அங்கிருந்த ஊராட்சி செயலா் முன்னிலையில் பதிவேடுகளைப் பாா்வையிட்டாா். ஊராட்சியின் வங்கிக்கணக்கு புத்தகங்கள், ரொக்கப் பதிவேடுகள், செலவுச்சீட்டுகள், ரசீதுகள் உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.