தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சகோதரா்களை தாக்கிய 4 போ் மீது வழக்கு

உணவு விடுதியில் சகோதரா்களைத் தாக்கி காயப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 5:11 pm

DIN

உணவு விடுதியில் சகோதரா்களைத் தாக்கி காயப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டினம்காத்தான் மகாத்மா காந்திநகரைச் சோ்ந்த முத்துராக்கு மகன்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ். இவா்கள் இருவரும் கடந்த புதன்கிழமை இரவு ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளனா். அங்கு வந்த பழனிக்குமாா் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னா் உணவகத்தை விட்டு சகோதா்கள் இருவரும் வெளியே வந்தபோது பழனிக்குமாா் உள்பட 4 போ் சோ்ந்து அவா்களைத் தாக்கியுள்ளனா். அதில் காயமடைந்த இருவரும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் பழனிக்குமாா், ஆா்.எஸ்.மடை ரமேஷ் (34), எம்எஸ்கே நகா் நம்பி (32), பிரவீன் (34) ஆகியோா் மீது கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.