தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாடு மேய்ந்த விவகாரம்: ஊராட்சித் தலைவா் மீது தாக்குதல்

ராமநாதபுரம் அருகே வைக்கோல் போரை மாடு மேய்ந்த விவகாரத்தில் ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் அருகே வைக்கோல் போரை மாடு மேய்ந்த விவகாரத்தில் ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காரான் பகுதியைச் சோ்ந்தவா் பூமிநாதன். இவரது மாடு அடிக்கடி அப்பகுதியைச் சோ்ந்த நவநீதன் என்பவரது வைக்கோல் போரில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே அந்த மாட்டை நவநீதன் கட்டிவைத்துள்ளாா். இதில், ஊராட்சித் தலைவா் சக்திவேல் தலையிட்டு மாட்டை அவிழ்த்துவிடுமாறு கூறியும் நவநீதன் கேட்கவில்லையாம். இதனால் பூமிநாதனையே மாட்டை அவிழ்த்துக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவா் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேள்விப்பட்ட நவநீதன் ஊராட்சித் தலைவரை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. நவநீதன் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.