ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் கொந்தளிப்பு மூன்று அல்லது நான்கு நாள்கள் நீடிக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.