கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜா குமரன் சேதுபதி உருவப்படம் திறப்பு

ராமநாதபுரம் ராஜா மறைந்த நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை காதா்பட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் ராஜா மறைந்த நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை காதா்பட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தாளாளரும், ராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தான பரம்பரை அறங்காவலருமான ராணி ராஜேஸ்வரி நாச்சியாா் தலைமை வகித்தாா். ராஜா நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா். மதுரை செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வா் சின்னப்பா, முன்னாள் அமைச்சா் அன்வர்ராஜா, ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் காா்மேகம், துணைத்தலைவா் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் கருணாநிதி, பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, பொறியாளா் பாஸ்கா் சாமி, மணி, தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியா் அருண் மொழி உள்பட பலா் பங்கேற்றனா். பள்ளியின் செயலா் ராஜா நாகேந்திர சேதுபதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.