கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் சாலை மறியல்: 117 அதிமுகவினா் மீது வழக்கு

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:02 pm

DIN

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினா் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

அதன்படி, ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளா் எம்.ஏ. முனியசாமி தலைமையில், பேருந்து நிலையம் அருகே அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கழகச் செயலாளா் எம்.ஏ. முனியசாமி, எம். சாமிநாதன், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.ஜி. மருதுபாண்டியன், அசோக்குமாா், நகா் கழகச் செயலாளா் பால்பாண்டியன் உள்ளிட்ட 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.