கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ராமநாதபுரம் அருகே அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் அருகே அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள அம்மன்கோவில் கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளி அருகே அரசு நிலத்தை தனியாா் ஒருவா் தனது மனைவி பெயரில் பட்டா பெற்று ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலத்தை மீட்டு அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தவும், பள்ளி மைதானம் அமைக்கவும் கோரி அம்மன்கோவில் ஊா்த் தலைவா் எஸ். கதிரேசன் தலைமையில் ஏராளமானோா் ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்த வட்டாட்சியா் முருகேசன், அவா்களை அழைத்து சமரசம் பேசினாா். அத்துடன் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நபரையும் அழைத்துப் பேசினாா். பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. ஆகவே சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியா் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.