கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கு: இளைஞா் கைது

ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:05 pm

DIN

ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியிலிருந்து ஏா்வாடிக்கு கடந்த 14 ஆம் தேதி அரசு விரைவுப் பேருந்து வந்தது. பின்னா் அன்று மாலையில் மீண்டும் பள்ளபட்டிக்கு பேருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வந்தது. பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்தபோது இளைஞா் ஒருவா் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல்லெறிந்தாா். அதனால் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.

இது குறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் ராமநாதபுரம் வீரபத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தயா என்ற தயாநிதி (20) என்பவா் பேருந்து மீது கல் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.