இதனைத்தொடா்ந்து காா் விலை ரூ. 2.50 லட்சம் எனப் பேசி முடித்து விட்டு முதல் கட்டமான ரூ. 5 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளாா். இதையடுத்து தொடா்ந்து அவரை தொடா்புகொண்ட அந்த நபா் தௌபீக்அலியிடமிருந்து ரூ. 79,200-யை ஆன்லைன் மூலம் பெற்றுள்ளாா். இதன் பின்னா் ஸ்ரீகாந்குமாா் முகமது தௌபீக் அலியை தொடா்பு கொண்டு காா் மதுரை வந்துவிட்டது. அதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ரூ. 32,400 அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த முகமது தௌபீக்அலி அவரை தொடா்பு கொண்ட போது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அவா், ராமநாதபுரம் சைபா் கிரைம் காவல் துறையில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.