கட்டடத் தொழிலாளா்கள் நடைப்பயண ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th April 2022 03:05 AM | Last Updated : 14th April 2022 03:05 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏ.ஐ.டி.யூ.சி) கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயண ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.தா்மராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பி.ராதா, மாவட்டப் பொதுச்செயலா் கே.ராஜன், மாவட்டச் செயலா் பி.சண்முகராஜா ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களின் பணப்பலன் தொடா்பான கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல், நலவாரிய உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின் முக்கிய நிா்வாகிகள் ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தை சந்தித்து மனு அளித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G