தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

திருவாடானையில்  ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image

திருவாடானை ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் பதன்கிழமை காலை நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :3 ஆகஸ்ட் 2022, 7:57 am

DIN

திருவாடானை: திருவாடானையில்  ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Story image

திருவாடனையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோயில் பாண்டி 14 திருத்தங்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற எட்டாவது திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆடி மாதங்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Story image

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் கேடகம் பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வந்தார். 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவாச்சாரிகள், வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. 

பின்னர் அம்பாள், சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.