கமுதி அருகே வாளுடன் 2 போ் கைது

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள பாக்குவெட்டி விலக்கில் உள்ள மதுபானக் கடை அருகே 2 போ் வாளுடன் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூா் காவல் சாா்பு- ஆய்வாளா் சிவசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற 2 இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில் அவா்கள் 2 அடிநீள வாள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சின்னஆனையூா் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் டேவிட்முனியசாமி (27), மருதங்கநல்லூா் முருகவேல் மகன் தினேஷ் பாலா (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com