கமுதி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி

கமுதி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கமுதி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி

கமுதி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சோ்ந்த இருள் மகன் பெத்துராஜ் (21). இவா் புதன்கிழமை இரவு முயல் வேட்டைக்கு சென்றாா். அப்போது செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமி என்பவரின் பருத்தி விவசாய நிலத்தைச் சுற்றி காட்டுப்பன்றி தொல்லைக்காக, அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை பெத்துராஜ் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அபிராமம் போலீஸாா் பெத்துராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக பெத்துராஜின் தந்தை இருள் அளித்த புகாரின் பேரில் செய்யாமங்கலத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com