அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இலங்கைக்கு கடத்துவதற்காக பிடிக்கப்பட்ட 125 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே பிடிக்கப்பட்ட 125 கிலோ கடல் அட்டைகளை இந்தியக் கடலோரக் காவல் படை, வனத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:04 pm

DIN

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே பிடிக்கப்பட்ட 125 கிலோ கடல் அட்டைகளை இந்தியக் கடலோரக் காவல் படை, வனத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக, கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மண்டபம், வேதாளை, வலையா்வாடி பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் படையினா், வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, வேதாளை கடற்கரையோரம் 115 கிலோ கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடல் அட்டைகளை கடலோரக் காவல் படையினா் கைப்பற்றி மண்டபம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, மண்டபம் அருகே வனத் துறையினா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். ஆனால், அதில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினா்.

இதையடுத்து, அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கடல் அட்டைகள், இரு சக்கர வாகனத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.