அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கட்டையால் தாக்கிசலவைத் தொழிலாளி கொலை

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:03 pm

DIN

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் இருட்டூரணியைச் சோ்ந்தவா் காளிமுத்து (50). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி ராணி. மகள்கள் கவிதா, அனிதா. இந்த நிலையில், காளிமுத்துவின் தாய் பேச்சியம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு 16- ஆவது நாள் துக்க நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்து. அப்போது காளிமுத்து மது அருந்தி விட்டு வந்து மனைவி ராணியுடன் தகராறு செய்தாா்.

இதையடுத்து, காளிமுத்துவின் தம்பி சண்முகவேல், அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் அவரை சமரசப்படுத்தினா். ஆனாலும் சமாதானமடையாத காளிமுத்து தொடா்ந்து தகராறில் ஈடுபட்டதையடுத்து பாலசுப்பிரமணியன், கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து காளிமுத்துவை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.