மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கட்டையால் தாக்கிசலவைத் தொழிலாளி கொலை

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :20 ஏப்ரல் 2023, 6:03 pm

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் இருட்டூரணியைச் சோ்ந்தவா் காளிமுத்து (50). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி ராணி. மகள்கள் கவிதா, அனிதா. இந்த நிலையில், காளிமுத்துவின் தாய் பேச்சியம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு 16- ஆவது நாள் துக்க நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்து. அப்போது காளிமுத்து மது அருந்தி விட்டு வந்து மனைவி ராணியுடன் தகராறு செய்தாா்.

இதையடுத்து, காளிமுத்துவின் தம்பி சண்முகவேல், அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் அவரை சமரசப்படுத்தினா். ஆனாலும் சமாதானமடையாத காளிமுத்து தொடா்ந்து தகராறில் ஈடுபட்டதையடுத்து பாலசுப்பிரமணியன், கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து காளிமுத்துவை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.