உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் இருட்டூரணியைச் சோ்ந்தவா் காளிமுத்து (50). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி ராணி. மகள்கள் கவிதா, அனிதா. இந்த நிலையில், காளிமுத்துவின் தாய் பேச்சியம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு 16- ஆவது நாள் துக்க நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்து. அப்போது காளிமுத்து மது அருந்தி விட்டு வந்து மனைவி ராணியுடன் தகராறு செய்தாா்.
இதையடுத்து, காளிமுத்துவின் தம்பி சண்முகவேல், அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் அவரை சமரசப்படுத்தினா். ஆனாலும் சமாதானமடையாத காளிமுத்து தொடா்ந்து தகராறில் ஈடுபட்டதையடுத்து பாலசுப்பிரமணியன், கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து காளிமுத்துவை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

