ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுதிறனாளிகள் குறைதீா் முகாம்

கமுதியில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:04 pm

DIN

கமுதியில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் பரமக்குடி கோட்டாட்சியா் அப்தாப் ரசூல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், காதொலிக் கருவி, தேசிய அடையாள அட்டை என ரூ.86 ஆயிரம் மதிப்பிலான உதவி, உபகரணங்களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

முகாமில் மண்டல துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலா் ராமசுப்பு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரன், வட்டார வேளாண் அலுவலா் சிவராணி, முதுகுளத்தூா் வட்டாட்சியா் முத்துலட்சுமி (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), மண்டல துணை வட்டாட்சியா் மஞ்சுளா, கமுதி வட்டார வளமைய சிறப்பாசிரியா் முத்திருளாண்டி, தசை பயிற்சியாளா் முருகவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.