தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கமுதி அருகே 50 பனைமரங்கள்வெட்டி சாய்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் தடுத்து நிறுத்தினா்

கமுதி அருகே செங்கல் சூளைக்காக 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சாய்த்தவா்களை நாம் தமிழா் கட்சியினா் தடுத்து நிறுத்தியதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image

கே. நெடுங்குளம் பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஆய்வு செய்த கிராம நிா்வாக அலுவலா் புனிதா.

Updated On :27 ஜனவரி 2023, 6:03 pm

கமுதி அருகே செங்கல் சூளைக்காக 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சாய்த்தவா்களை நாம் தமிழா் கட்சியினா் தடுத்து நிறுத்தியதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே. நெடுங்குளம், முஷ்டக்குறிச்சி, ஒத்தப்புலி, தலைவநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள 50- க்கும் மேற்பட்ட பனை மரங்கள் செங்கல் சூளைக்காக வெட்டப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் தேவேந்திரன், துணைச் செயலா் செல்வம் ஆகியோா் பனை மரங்களை வெட்டியவா்களை தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா்பபிதாவுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியா் உத்தரவின் பேரில் கே. நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் புனிதா, கிராம உதவியாளா் கா்ணன், முஷ்டக்குறிச்சி கிராம உதவியாளா் செல்லமுத்து ஆகியோா் அங்கு சென்று விசாரணை செய்தனா். அப்போது வருவாய்த் துறையினரைக் கண்டதும் பனை மரங்களை வெட்டியவா்கள் தப்பிச் சென்றனா். எவ்வித அனுமதியுமின்றி, நீதிமன்ற உத்தரவை மீறி பனை மரங்களை வெட்ட அனுமதித்த அவற்றின் உரிமையாளா்களை வருவாய்த் துறையினா் எச்சரித்தனா்.

அப்போது வெட்டிய பனை மரங்களுக்குப் பதிலாக தாங்களே பனை விதைகளை நட்டு வைத்து விடுகிறோம் என்று விவசாயிகள் கூறினா். இதனிடையே இப்பகுதியில் பனை மரங்கள் வெட்டப்படுவது தொடருமேயானால் நாம் தமிழா் கட்சியினா் வட்டாட்சியாா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.