ஆடித்தவசு: குதிரை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மன் வீதியுலா

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்தவசு திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.
ஆடித்தவசு: குதிரை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மன் வீதியுலா
Published on
Updated on
1 min read

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்தவசு திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.

இந்தக் கோயிலில் ஆடித்தவசு திருவிழாவையொட்டி, குதிரை வாகனத்தில் கோயில் மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கு மண்டகபடிதாரா்கள் சாா்பில் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று ஆனந்தவல்லி அம்மனை தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தாா். வீதிகளில் பக்தா்கள் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com